July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – பங்களாதேஷ் பிரதமர்கள் கலந்துரையாடல்!

File Photo

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனா ஆகியோருக்கு இடையே தொலைபேசி ஊடான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இலங்கையின் உண்மை மற்றும் நேர்மையான நண்பராக இருக்கும் பங்காளாதேஷுடனான வரலாற்று நட்பை மதிப்பதாக தான் பங்களாதேஷ் பிரதமரிடம் கூறியதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.