May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் அந்நிய செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பங்களாதேஷ் அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் பங்களாதேஷின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்த கடனுதவி பங்களாதேஷ் வங்கி (BB) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இடையே ஆகஸ்ட் 3 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.

ஒப்பந்தத்தின் கீழ் முன்னதாக ஆகஸ்ட் 18 அன்று, பங்களாதேஷ் வங்கி இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் வேகமாக குறைந்து வரும் வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்கவும் மற்றும் அதன் மாற்று விகிதத்தில் அழுத்தத்தை எளிதாக்குவதையும் இந்த கடன் தொகை நோக்கமாக கொண்டது.

கடன் தொகை மூன்று கட்டங்களாக வழங்கப்படுவதுடன், தற்போது 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷ் வங்கியிடமிருந்து இலங்கை வங்கி கடனாக பெற்றுள்ளது.

மார்ச் 2021 இல் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷுக்கு விஜயம் செய்தபோது இந்த நாணய மாற்றத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.