June 13, 2025 11:53:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்றில் முதற்தடவையாக செங்கோலுடன் நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபை வரலாற்றில் முதற்தடவையாக, இன்றைய சபை அமர்வு செங்கோலுடன் நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10 ஆவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய மறைந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய நல்லூர் கந்தசுவாமி ஆலயம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் இந்த செங்கோல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய தினம் யாழ். மாநகர சபையின் அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.