July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானம்!

Rice Common Image

மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெட்ரிக் டொன் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெட்ரிக் டொன் அரிசியை, ஒரு மெட்ரிக் டொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட வகையில் இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.