
பனாமுரே இளைஞனின் மரணத்துக்கும் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பனாமுரே இளைஞன் தமது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், துறைசார் அமைச்சர் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை மறுத்து, பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு பாரதூரமானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பழக்கமுள்ள நபர் அடிக்கடி மனைவியைத் தாக்குவதாகவும் மனைவியின் முறைப்பாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரணியில் கலந்துகொண்டவர் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தி, கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.