July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டது!

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை 2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல மார்ச் 5 ஆம் திகதி வரையிலும் மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையிலும் நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையால் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டமையினால் பரீட்சைகளை அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.