![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/soil-766281_1920.jpg?fit=1024%2C681&ssl=1)
file photo
இலங்கைக்கு அனுப்பப்பட்ட சேதன உரத்தில் நச்சு பெக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சீனாவின் சேதன உர நிறுவனத்திற்கு வணிக மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சீன நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் மற்றும் அரச வங்கி ஒன்றுக்கும் வணிக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிட்டுள்ளது.
சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவருக்கு கடன் கடிதத்தின் கீழ் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படுவதையும் நீதிமன்றம் தடுத்துள்ளது.
தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, உரத்தில் தீங்கு விளைவிக்கும் பெக்டீரியா மற்றும் ஏனைய நுண்ணுயிரினங்களின் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.