July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியும்”: தேர்தல்கள் ஆணைக்குழு

தேவையான சட்டத் திருத்தங்களை செய்தால் பழைய முறைப்படி மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய முறையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான எல்லை நிர்ணயம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நீண்ட காலத்தை செலவிட வேண்டி வரும் என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எனினும் விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதென்றால் சட்டத்தில் திருத்தங்களை செய்தால் போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி திட்டமிடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா பாதுகாப்பு முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்படும் நிதி அதிகரிக்கலாம் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.