
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர இன்று காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவரான பந்துல வர்ணபுர, 1975 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியில் இருந்த அவர், 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
பந்துல வர்ணபுரவின் தலைமைத்துவம் இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு வழிகோலியது.