June 14, 2025 2:09:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் போராட்டம்!

உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு, கிழக்கில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பிரதேசங்களில் உள்ள கம###நல சேவை நிலையங்கள் முன்பாக விவசாயிகள் இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளார்.

”வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய்”, ”விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய்”, ”உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.