
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈரானைச் சேர்ந்த கைதிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக தெரிவித்துள்ளார்.
கிருமிகளில் இருந்து கைகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் தொற்று நீக்கி திரவத்தையே இவர்கள் அருந்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட கைதிகள் அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கொழும்பு விளக்க மறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகம் மூலம் வழங்கப்பட்ட தொற்று நீக்கி திரவத்தையே இவர்கள் அருந்தியுள்ளனர்.