May 30, 2025 16:25:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 மார்ச் மாதத்திற்குள் மாகாண சபைகள் தேர்தல்?

2022 மார்ச் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதன்படி மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.