June 1, 2025 14:05:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா இராகலை தோட்டத்தில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

நுவரெலியா மாவட்டத்தின் இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 35 வயது தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அந்த சிறுவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோர் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் காரணம் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.