April 17, 2025 10:14:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில், உயர்தரப் பரீட்சைகள் மேலும் பிற்போடப்பட்டன

இலங்கையில் தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மேலும் பிற்போடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயன்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் குறித்த பரீட்சைகள் இரண்டும் கொவிட் பரவல் காரணமாக நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில், நவம்பர் மாதத்திலும் பரீட்சைகளை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயன்த குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.