June 17, 2025 22:28:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தைக் கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

File Photo

காலம் தாழ்த்தாது உரிய காலத்திற்குள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தொடர்பாக மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் வேதனைகளை புரிந்துகொள்ள முடியும். இதனால் சர்வதேசத்திற்கு சென்று தேர்தல் தொடர்பில் பொய்களை கூறாது, உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.