May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் பிரேமதாஸவின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும் என்கிறார் அனுரகுமார திசாநாயக்க

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள நிலையில், அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், யாராவது தேர்தல் நடத்தக் கோருவார்களா? என்று ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கம் மற்றும் நாடு சந்தித்துள்ள நெருக்கடி நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் இலாபம் காண முயற்சிப்பதாக ஜேவிபி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்றைக் கோருபவரின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.