June 15, 2025 13:00:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் கைதிகளுடன் நீதி அமைச்சர் கலந்துரையாடல்

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி, சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று முற்பகல் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர், அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், கைதிகள் சிலரையும் சந்தித்துள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரித்துள்ள நீதி அமைச்சர், தங்களுக்கு அங்கு பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சனையும் இல்லையென்று கைதிகள் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

”நான் கைதிகளிடம் கேட்டேன். அவர்களுக்கு இங்கே பாதுகாப்பு தொடர்பிலோ, வசதிகள் தொடர்பிலோ பிரச்சனை இல்லை என்றே கூறினர். தமது சொந்த இடங்கள் அருகில் இருப்பதாலேயே அவர்கள் யார்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என்று கோருகின்றனர். இங்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்குமாக இருந்தால், உயர் பாதுகாப்பு இடத்திற்கு அனுப்ப முடியும் என்று நான் கூறினேன்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.