July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் பொலிஸ் சுற்றிவளைப்பு: 1172 பேர் கைது!

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1172 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோணின் ஆலோசனைக்கமைய, நேற்று முற்பகல் 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 606 சந்தேக நபர்களும், மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 435 சந்தேக நபர்களும் மற்றும் வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 42 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.