![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/E_zbX4zVUA0biFQ.jpg?fit=680%2C383&ssl=1)
இலங்கையின் இளம் பாடகர்களான யொஹானி மற்றும் ஷதீஷனுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக நளின் பண்டார பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
யொஹானி மற்றும் ஷதீஷன் பாடிய ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் உலக அளவில் ஹிட் ஆகியுள்ளதை சுட்டிக்காட்டியே, அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
‘மெனிகே மகே ஹிதே’ பாடல் யூடியுபில் 118 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்தப் பாடல் ஹிட் ஆகியதைத் தொடர்ந்து யொஹானியை இந்திய தூதரகம் ‘கலாசார தூதுவராக’ பெயரிட்டதையும் நளின் பண்டார எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.