May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனது படைப்பில் புதிய பாடலை வெளியிட உள்ளார் யொஹானி!

உலக அளவில் பிரபலமடைந்துள்ள இலங்கை பாடகி யொஹானி டி சில்வா தனது படைப்பில் புதிய பாடலை வெளியிட உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘சீ’ தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 23 மில்லியன் சனத்தொகை இருக்கும் நிலையில் தனது ‘மேனிகே மஹே ஹிதே’ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியபோது, ​​அது இலங்கைக்கு ஒரு பெரிய விடயமாக நினைத்ததாகவும் அதன் பின்னர் இந்தியா உட்பட பல நாடுகளில் அது 20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதாக அறியும் போது தான் வியப்படைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது பாடலை விரும்பும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், விரைவில் தனது புதிய பாடலை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் மூலம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மிகவும் பிரபலமான பாடகி யொஹானி டி சில்வாவின் முதலாவது சர்வதேச இசை நிகழ்ச்சி இந்தியா  – புதுடில்லியில் வியாழக்கிழமை நடைப்பெற்றது.

‘ஸீ லைவ்’ யொஹானியுடன் இணைந்து ஹைதராபாத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஒக்டோபர் 3ஆம் திகதி ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஸீ லைவ்’ இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே ‘சீ’  தொலைக்காட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

“ஷிட்டாட்” பாலிவுட் திரைப்படத்துக்கான யொஹானி பாடிய பாடலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.