![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/209006854_5831501493557629_5364983446624635620_n.jpg?fit=1024%2C682&ssl=1)
இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து பயணிப்பவர்களுககு கொரோனா வைரஸ் சோதனைகளில் தளர்வுகளை பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி செப்டம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல், இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, கென்யா, ஓமன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய எட்டு நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
குறித்த திகதியிலிருந்து சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு பயணிப்பவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் பி.சி.ஆர் சோதனைகள் தேவையில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.