July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கருத்தரிப்பதை ஒருவருடத்திற்கு ஒத்திவையுங்கள்”: விசேட மருத்துவ நிபுணர் ஹர்ஷ அத்தபத்து

இலங்கையில் கொவிட் திரிபுக்களின் அச்சுறுத்தல் நிலவுவதால், பெண்கள் கருத்தரிப்பதை ஒருவருடத்திற்கு ஒத்திவைப்பது நல்லது என்று விசேட மருத்துவ நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விசேட மருத்துவ நிபுணர் இதனைக் கூறியுள்ளார்.

கொவிட் வைரஸ் நாளுக்கு நாள் மாறுபாடடைந்து முன்னரை விடவும் வீரியமிக்கதாக பரவல் அடைந்து வருகின்றது.கொவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்தும் மெற்கொள்ளப்படுகின்றன. இதனை முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் காலம் ஆகலாம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வைரஸ்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிப்பதோடு கருவில் உள்ள குழந்தையையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திருமணமான குழந்தைகளை எதிர்பார்த்திருப்போர், கர்ப்பம் தரிப்பதை இன்னும் ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்தினால் நல்லதாக கருதுவதாகவும், இதனால் இந்தக் காலப்பகுதியில் பொறுத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை  பின்பற்றுவது சிறந்தது என்றும் விசேட மருத்துவ நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்துள்ளார்.