July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் 121 ‘மெகா’ அபிவிருத்தி திட்டங்களை  நிறைவு செய்ய அரசாங்கம் முயற்சி!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆண்டு 121 மெகா அளவிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவு செய்யும் திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளதாக நிதி அமைச்சு ஆகஸ்ட் 16 அன்று வெளியிட்டுள்ள அமைச்சரவை குறிப்பில் தெரிய வந்துள்ளது.

2021 -2030 காலப்பகுதியில் முடிக்கப்பட வேண்டிய 319 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட 121 அபிவிருத்தி திட்டங்களில் மூன்று திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

இந்த கட்டுமான திட்டங்களில் பெரும்பாலானவை நிதித் தடைகள் மற்றும் கொவிட் -19 சூழ்நிலைகள் காரணமாக மந்தமாகவோ அல்லது நிறுத்தப்பட்டதாகவோ அமைச்சரவை குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

284 மெகா அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் தற்போது 41 வரி அமைச்சகங்களின் கீழ் செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளன.

இந்த திட்டங்களுக்கான ரூ .6,744 பில்லியன் மொத்த முதலீடு தொகையில் ரூ .1, 638 பில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் செலவீனங்களுக்கு  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் தேவைப்படும் நிலையில் நாட்டின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதத்திலும் குறைவடைந்துள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த பணத்தை திரட்டுவதில் அமைச்சகம் ஒரு மகத்தான பணியை எதிர்கொண்டுள்ளதாக நிதி அமைச்சின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று நோய் பரவுவதால் விதிக்கப்பட்ட  பயணக் கட்டுப்பாடுகள், சர்வதேச வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது.

284 மெகா அளவிலான திட்டங்களில் 127 மெகா அளவிலான திட்டங்களுக்கு  உள்ளூர் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்கள் பெறப்பட்டுள்ளன.

2021 ஆண்டில் 53 புதிய திட்டங்களுக்கு 185 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதில் முதல் காலாண்டில் ரூ. 25 பில்லியன் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இலக்கு வைக்கப்பட்ட செலவில் 38 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சகத்தில் இந்த வாரம் நடைபெற்றது.

முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் ஏற்கனவே முதலீடுகளை ஈர்த்த பிற துறைகளை மேம்படுத்தக்கூடிய துறைகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை நிதி அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.