June 12, 2025 17:47:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் கொரோனா பயணக் கட்டுப்பாட்டு சிவப்புப் பட்டியலில் இலங்கை

file photo: Facebook/ Heathrow Airport

பிரிட்டனின் புதுப்பிக்கப்பட்ட கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இலங்கை தொடர்ந்தும் சிவப்புப் பட்டியலில் உள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த காரணத்தினால் பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் தொடர்கிறது.

செப்டம்பர் மாதமளவில் பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கை வெளியேறலாம் என்று பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

பிரிட்டனின் புதுப்பிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில் கனடா, டென்மார்க், பின்லாந்து, போர்துகல், சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் பச்சைப் பட்டியலுக்கு முன்னேறியுள்ளன.

தாய்லாந்து மற்றும் மொன்டினீக்ரோ ஆகிய நாடுகள் புதிதாக சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரிட்டனின் புதுப்பிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.