July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை 100 பேருடன் நடத்த அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை 100 பேருடன், ஆலயத்தின் உட்பிராகரத்தில் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலமையை கருத்திற்கொண்டு ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஒழுங்குவிதிகளை பின்பற்றி திருவிழா நிகழ்வுகள் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட செயலாளர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.

இந்த உற்சவத்தினை சிறப்பாக நட த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.