July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வட மாகாணத்திற்கான மிகுதி 7548.058 மில்லியன் ரூபா எப்போது விடுவிக்கப்படும்?’

வடக்கு மாகாணத்தில் 4082 மாதிரி கிராமங்களில் 19 ஆயிரத்து 222 குடும்பங்களை கொண்ட வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட ஒதுக்கிய 11 ஆயிரத்து 203.909 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 3655 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது.மிகுதி 7548.058 மில்லியன் ரூபா எப்போது விடுவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு கடந்த 2018,2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தினால் அக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாதிரி கிராமங்கள், வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள், கடனும் கடன் மானியங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம்,இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டது என கூறிய அவர்,மொத்தமாக வடக்கு மாகாணத்தில் 4082 மாதிரி கிராமங்களில் 19 ஆயிரத்து 222 குடும்பங்களை கொண்ட வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.

இதற்காக 11 ஆயிரத்து 203.909 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 3655 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது.மிகுதி 7548.058 மில்லியன் ரூபா விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.எனவே மக்கள் ஒரு நிரந்தர வீட்டை அமைக்க எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களுக்கு மீள வீட்டுத் திட்டத்தை உருவாக்க நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.