July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து;720 மில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முதல் கட்டமாக ரூ .720 மில்லியனை வழங்க கப்பல் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதன் படி 720 மில்லியன் ரூபா கருவூல கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிடுகின்றது.

அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடிய விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதி அமைச்சு கூறுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை இது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.