June 12, 2025 23:11:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் விவசாய உர தட்டுப்பாடு ஏற்படாது’: அமைச்சர் மகிந்தானந்த

இலங்கையில் எதிர்வரும் சிறு போக விவசாய பயிர்ச் செய்கைக்கு உர தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

உர விற்பனை நிறுவனங்கள் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்தை பதுக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுக்கியுள்ள உரத்தை ஒரு வாரத்தினுள் விவசாய சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விவசாய உரம் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதன உரம் தயாரிப்பதற்கான விவசாயிகளுக்கு 12,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.