October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ வாகனத்துடன் எரிபொருள் பவுஸர் மோதியதில் இராணுவ அதிகாரி பலி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றுடன் எரிபொருள் பவுஸர் ஒன்று இன்று (5) அதிகாலை மோதியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் 5 இராணுவ வீரர்கள் மஹவ மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் – பாதெனிய வீதியின் அம்பகஸ்வெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் விஸ்வமடு இராணுவ முகாம்களில் இருந்து 7 இராணுவத்தினரை அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பவுஸர் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் பவுஸர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.