May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்பதிவு திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மீள ஆரம்பம்!

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகங்கள்  ஜுலை 5 ஆம் திகதி முதல் மீள திறக்கப்பட உள்ளன.

குறித்த திகதியிலிருந்து பொதுமக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க உள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அங்கு சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் அது குறித்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்தன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி இலக்கங்கள்

பத்தரமுல்லை – தலைமை அலுவலகம்

0115 226 126, 0115 226 100

வட மாகாண அலுவலகம்
0242 227 201

கிழக்கு மாகாண அலுவலகம்
0652 229 449

தென் மாகாண அலுவலகம்
0912 228 348

வடமேல் மாகாண அலுவலகம்
0372 224 337