May 28, 2025 11:55:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறாக பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிங்கபூர கிராமசேவகர் பிரிவில் சன்ஹிந்த செவன வீட்டுத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்பொரள்ள 100ஆம் இலக்க தோட்டம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.