May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 3 மாவட்டங்களில் கிராமசேவகர் பிரிவுகள் சில இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4 பொலிஸ் பிரிவுகளில் 5 கிராமசேவகர் பிரிவுகள் இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பான விபரங்கள்