July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு அனுமதி வழங்க முடியாது’; பந்துல குணவர்தன

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது மேலும் சுமையை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முன்னணி பால் மா இறக்குமதியாளர்கள், உலக சந்தையில் விலை அதிகரிப்பு, ரூபாவின் தேய்மானம், பரிமாற்ற செலவு ஆகியவற்றை காரணம் காட்டி, ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டுக்கு 350 ரூபாவை அதிகரிக்க அனுமதி  கோரியிருந்தனர்.

இல்லாவிடின், உள்ளூர் சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், மக்கள் ஏற்கனவே சிரமங்களை தாங்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.