![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/Ellagunawnsa.jpg?fit=742%2C422&ssl=1)
நாட்டின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அடுத்த வாரத்தில் நீதிமன்றம் செல்லவுள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுவது தொடர்பில் நாட்டின் உரிமையாளர்களாக எவரும் தேடிப்பார்ப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தான் இந்த விடயத்தில் நான் தேடிப்பார்த்து நீதிமன்ற ரீதியில் நடவடிக்கையெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டை இல்லாமல் போக இடமளிக்க முடியாது. நாட்டை நேசிப்பவர்களாக இந்த நாட்டை எமது கைகளில் எடுக்கும் வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றும், இதற்காக முன்வருவதற்கு தான் தயராகவே இருப்பதாகவும் குணவங்ச தேரர் கூறியுள்ளார்.
.