June 16, 2025 6:06:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்.எஸ்.சி மெசீனா கப்பல் தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

இலங்கையின் தென் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி மெசீனா’ கொள்கலன் கப்பலில் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென் கடற்பரப்பில் மகா ராவணா வெளிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திர பகுதியில் நேற்று முன்தினம் குறித்த கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

லைபீரியா நாட்டுக்கு சொந்தமான ‘எம்.எஸ்.சி மெசீனா’ கொள்கலன் கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த போதே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.