July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் விசேட வர்த்தமானி வெளியானது!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு ரணில் விக்ரமசிங்கவை பெயரிட்ட ஆவணம் கடந்த புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து, வர்த்தமானியில் அவரது பெயர் இன்று (18) வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.