June 14, 2025 22:37:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தெற்குக் கடலில் படகொன்றில் இருந்து பெருமளவு ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மீன்பிடி படகொன்றில் இருந்து 219 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

வெலிகம, பொல்வதுமோதர கடல் பகுதியில் நெடுந்தூர மீன்பிடி படகொன்றை சுற்றிவளைத்து கடற்படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெட்டி அதனுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 1758 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில்அந்தப் படகில் இருந்த 6 பேரும், அவர்களுடன் கரையில் இருந்து தொடர்புகளை பேணிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.