May 27, 2025 22:19:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி வரை நீடிப்பு!

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இராணுவ தளபதி இன்று (02) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.