![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/Photo-9.jpg?fit=800%2C450&ssl=1)
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இராணுவ தளபதி இன்று (02) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.