July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கொவிட் நிதியத்திற்கு ஹுவாவி நிறுவனம் நிதி உதவி

கொவிட் சவாலை வெற்றி கொள்வதற்காக ஹுவாவி நிறுவனம் இலங்கையின் ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது.

ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து அந்த நிதியை கையளித்துள்ளனர்.

தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி, இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை  பிரதமருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

சுமார் 10,000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் திறமையானர்வளாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர்  காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்தத குலரத்ன, ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி, ஹுவாவி, நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யீ, மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் கிறிஸ்டோஃப் லீ, வணிக மற்றும் நிறுவன பிரிவுகளின் தலைவர் ஷியாஓ ஹுவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.