June 14, 2025 22:59:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் கொவிட் மரணங்கள் 53 வீதத்தால் உயர்வடைந்துள்ளது”

கொவிட் -19 வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 53 வீதத்தால்
உயர்வடைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், 83 வீதமான உயிரிழப்புகள் அதிகளவில் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பரவும் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைவரம் மற்றும் மரணங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,

‘கொவிட் வைரஸ் பரவல் இன்னமும் மோசமான கட்டத்திலேயே உள்ளது.நாடு இரு வாரங்கள் முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் ஓரளவு சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும் இந்த முடக்க காலத்திற்குள் அதிகளவானவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் மரணங்களை பார்க்கையில் இதற்கு முன்னர் இருந்ததை விடவும் கடந்த வாரத்தில் மரணங்களில் எண்ணிக்கை 53 சதவீத அதிகரிப்பை காட்டுகின்றது.

இதற்கு மக்களின் சனநெரிசல் மற்றும் சுகாதார வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமையே காரணமாகும். ஏற்பட்ட மரணங்களில் 75 வீதமான மரணங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகும்.

இதேவேளை உயரிழந்தவர்கள், தொற்றா நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செனால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.