February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 நெருக்கடி காரணமாக நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளை கருத்திற்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாளாந்த செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள பிரதான காரியாலயம், அநுராதபுரம் , அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, கண்டி, கல்முனை, யாழ்ப்பாணம், மாத்தறை, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய காரியாலயங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.