May 31, 2025 19:24:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போதைப் பொருட்களுடன் விருந்துபசார நிகழ்வு: 7 பேர் கைது!

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் கொழும்பு, இராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருளுடன் விருந்துபசாரமொன்றை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட  7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.