
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ள பொது மன்னிப்பு கோரும் கடிதம் சட்டத்தரணி ராமநாயக்கவின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச ஆவணங்களை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த ஆவணங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த ஆவணங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.