July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்!

கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை முதல் இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம சேவகர் பிரிவு, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அல்விஸ் வத்த கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பின்வத்த கிராம உத்தியோகத்தர் சேவகர் பிரிவு, நாரான்பிடிய கிராம சேவகர் பிரிவு, பின்வத்த மேல் கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கு மன்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம  சேவகர் பிரிவுவும் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்கு உட்பட்ட ரத்மெடிய கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.