June 13, 2025 17:24:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரையில் இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே இவ்வாறு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிவாசல்களினதும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், கூட்டு தொழுகை, ஜூம்ஆ தொழுகை போன்றவற்றை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

25 பேர் எனும் உச்ச வரம்புடன் ஐந்து நேர தொழுகையை நடத்துமாறும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை மூடுமாறும் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.