October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் நிலையில், இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மகிந்தவைச் சந்தித்துள்ளார்.

This slideshow requires JavaScript.