
மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் ரத்து செய்ய கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக எந்த ஒரு மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த வேண்டாம் என கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.