July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ராகித ராஜபக்‌ஷவும் விபத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேநேரம், ராகித ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரை கோட்டை நீதவான் நீதிமன்றம் 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளது.