October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் 1 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான நபருக்கு விளக்கமறியல்

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டுக்கோட்டை மாவடியில் வீடொன்றில் போதைப்பொருள் உள்ளதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் அங்கு வந்திருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட மற்றைய நபருக்கும் போதைப்பொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிரதான சந்தேக நபர் கூறியதையடுத்து அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.