June 16, 2025 17:26:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமான நிலையங்களில் தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

Photo: Facebook/ Bandaranaike International Airport

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இலங்கையில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த பின்னர் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் airport.lk என்ற இணைத்தளத்தில் பதிவு செய்துகொண்டு, விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விமான நிலையங்களின் தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கமைய தீர்வையற்ற வர்த்தக நிலையங்களையும் திறந்து, அங்கு பயணிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.